×

கொலை செய்யப்பட்ட ஆடிட்டரின் உடலை போஸ்ட்மார்டம் செய்ய கோரி சாலைமறியல்

திண்டுக்கல், அக். 26:  திண்டுக்கல் அருகே சிறுமலை ஊரடியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (26). ஆடிட்டர். மனைவி வான்மதி. இருவரும் திண்டுக்கல் பொன்னகரத்தில் வசித்து வந்தனர். கடந்த 21ம் தேதி பாலசுப்பிரமணியன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால், திண்டுக்கல் தாலுகா போலீசில் அவரது மனைவி புகார் கொடுத்தார் இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பாலசுப்பிரமணியனை தேடி வந்தனர். இதுதொடர்பாக அவரது நண்பரான திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த கார்த்தியிடம் (26) விசாரணை நடத்தியதில், முன்விரோதத்தில் பாலசுப்பிரமணியனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும், திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான மில் வளாகத்தில் பாலசுப்பிரமணியனின் உடலை புதைத்ததாக கார்த்தி தெரிவித்தார்.
இதற்கிடையே பாலசுப்பிரமணியனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறியும், இந்த கொலையில் வேறு யாரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்று கண்டுபிடிக்கவும் கோரியும் நேற்று காலை 8.30 மணியளவில் திண்டுக்கல்-நத்தம் சாலையில் அவரது உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திண்டுக்கல் தெற்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : auditor ,
× RELATED குத்தாலம் அருகே சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்